/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை வளைவு தரைப்பாலத்திற்கு இருபுறமும் தடுப்பு அவசியம்
/
சாலை வளைவு தரைப்பாலத்திற்கு இருபுறமும் தடுப்பு அவசியம்
சாலை வளைவு தரைப்பாலத்திற்கு இருபுறமும் தடுப்பு அவசியம்
சாலை வளைவு தரைப்பாலத்திற்கு இருபுறமும் தடுப்பு அவசியம்
ADDED : ஏப் 22, 2025 12:23 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, சிறுணை கிராமத்தில் இருந்து, கூரம் கிராமம் வழியாக, ஒழுக்கோல்பட்டு கிராம சாலை உள்ளது. இச்சாலை நடுவே, கூரம் ஏரி நீர் வரத்து கால்வாய் தரைப்பாலம் செல்கிறது.
இந்த தரைப்பாலத்தின் வழியாக, ஒழுக்கோல்பட்டு, வதியூர், கீழ்வெண்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர், சிறுணை கூட்டுச்சாலை வழியாக, பாலுச்செட்டிசத்திரம் பகுதிக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல, பாலுச்செட்டிசத்திரம், திருப்புட்குழி சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர், சிறுணை, கூரம் ஆகிய கிராமங்களின் வழியாக, ஒழுக்கோல்பட்டு நெமிலி, பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.
தற்போது, சாலை வளைவு தரைப்பாலத்தின்யோரம் இருபுறமும் தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.
எனவே, சிறுணை- - ஒழுக்கோல்பட்டு இடையே, கூரம் ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் தரைப்பாலம் வளைவில் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.