/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழையால் சாலை சேதம் சீரமைப்பு பணி துவக்கம்
/
மழையால் சாலை சேதம் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : அக் 18, 2024 08:19 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், தென்மேற்கு பருவ மழைக்கு சேதமான சாலைகள், நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, உத்திரமேரூர்- - புக்கத்துறை, உத்திரமேரூர்- - மானாம்பதி மற்றும் உத்திரமேரூர் -- காஞ்சிபுரம் ஆகிய தடத்தில், பழுதான சாலைகளை சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை உத்திரமேரூர் உதவி கோட்ட பொறியாளர் அனந்த கல்யாணராமன் கூறியதாவது:
பருவமழை துவங்கி உள்ளதால், முன்னதாக மழைக்கு சேதமான சாலைகள் பழுது நீக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் சேதமாகி உள்ள மாநில நெடுஞ்சாலைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, அச்சாலைகள் சீர் செய்யப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.