sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 24, 2025 07:37 PM

Google News

ADDED : ஜன 24, 2025 07:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கலைச்செல்வி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, ஓட்டுனர் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு சால்வை, இனிப்புகள் மற்றும் பூ கொடுத்து கவுரவித்தனர்.

இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக பச்சையப்பன் பள்ளியை அடைந்தனர். விபத்தில்லா பயணம் மேற்கொள்ளவும், விதிகளை கடைப்பிடிக்கவும் முழங்கங்கள் எழுப்பியபடி பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

இதில், போக்குவரத்து துறை முதன்மை மேலாளர் தட்சிணாமூர்த்தி, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளிதரன், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) பன்னீர் செல்வம், நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் இளங்கோ மற்றும் போக்குவரத்து ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us