sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

/

சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகளுக்கு சிரமம்


ADDED : ஏப் 27, 2025 02:31 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

காஞ்சிபுரம் - தக்கோலம் கூட்டு சாலை வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், தார் சாலையோரம் மழைநீர் கால்வாய் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.

இதில், தண்ணீர் செல்வதற்கு ஏற்ப வழி வகை செய்யவில்லை. மேலும், சாலையோரம் போடும் குப்பை மழை நீர் கால்வாயில் விழுந்துள்ளது. இதை மர்ம நபர்கள் சிலர் தீவைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகளுக்கு சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, காஞ்சிபுரம் அடுத்த, வெள்ளைகேட் மேம்பாலம் அருகே, மழைநீர் கால்வாய்யோரம் மர்ம நபர்கள் சிலர் குப்பைக்கு தீ வைத்தனர்.

எனவே, சாலையோரம் குப்பை கொட்டி எரிப்போர் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us