/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் அரசு மருத்துவமனை பணிக்கு ரூ.24 லட்சம் ஒதுக்கீடு
/
உத்திரமேரூர் அரசு மருத்துவமனை பணிக்கு ரூ.24 லட்சம் ஒதுக்கீடு
உத்திரமேரூர் அரசு மருத்துவமனை பணிக்கு ரூ.24 லட்சம் ஒதுக்கீடு
உத்திரமேரூர் அரசு மருத்துவமனை பணிக்கு ரூ.24 லட்சம் ஒதுக்கீடு
ADDED : பிப் 09, 2025 08:42 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் உள்ள செங்கல்பட்டு சாலையில், அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு, சுற்றுப்புறத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்தோர் வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில், விபத்து, தீக்காயம் உள்ளிட்டவைகளுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என, அப்பகுதி அப்பகுதிவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், 2023ல் உலக வங்கி திட்டத்தின் கீழ், 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மருத்துவமனை கட்டும் பணி துவக்கப்பட்டது. புதிதாக கட்டும் மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு, தாய் - சேய் நலப்பிரிவு ஆகிய அறைகளோடு, 1,000 பேர் சிகிச்சை பெறும் அளவுக்கு, படுக்கை வசதியோடு கட்டப்பட்டு வருகிறது.
தற்போது, மருத்துவமனை பெயர் பலகை, கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைக்க, 24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து உத்திரமேரூர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுந்தரம் கூறுகையில், ''உத்திரமேரூர் புதிய மருத்துவமனை கட்டும் பணி, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முழு பணியும் முடிக்கப்பட்டு, வரும் ஏப்ரல் மாதம் பயன்பாட்டிற்கு வரும்,” என்றார்.

