sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

டாஸ்மாக் சுவரில் துளையிட்டு ரூ.30,000 கொள்ளை

/

டாஸ்மாக் சுவரில் துளையிட்டு ரூ.30,000 கொள்ளை

டாஸ்மாக் சுவரில் துளையிட்டு ரூ.30,000 கொள்ளை

டாஸ்மாக் சுவரில் துளையிட்டு ரூ.30,000 கொள்ளை


ADDED : மார் 18, 2025 12:19 AM

Google News

ADDED : மார் 18, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அருகே, செவிலிமேடு பகுதியில், பாலாற்றையொட்டி டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் சனிக்கிழமை இரவு மது விற்பனையை முடித்த பின், கடையை பூட்டிக் கொண்டு ஊழியர்கள் சென்றனர்.

நேற்று முன்தினம், வழக்கம்போல, கடையை திறக்க ஊழியர்கள் கடையை திறந்து பார்த்தபோது, கடையின் பின்பக்க சுவரில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மதுபான பெட்டிகள் களைந்து கிடப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில், 30,000 ரூபாய் ரொக்கமும், ஏராளமான மதுபான பாட்டில்கள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது.

ஆனால், போலீஸ் தரப்பில், எந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். டாஸ்மாக் கடைக்கு பின்புறம், வயல்வெளியும், பாலாறும் இருப்பதால், ஆள் நடமாட்டம் இன்றி உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள், சுவரில் துளையிட்டு கொள்ளையடித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us