sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் அஷ்டமிக்கு சகஸ்ர தீப அலங்காரம்

/

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் அஷ்டமிக்கு சகஸ்ர தீப அலங்காரம்

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் அஷ்டமிக்கு சகஸ்ர தீப அலங்காரம்

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் அஷ்டமிக்கு சகஸ்ர தீப அலங்காரம்


ADDED : பிப் 12, 2025 08:12 PM

Google News

ADDED : பிப் 12, 2025 08:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாதந்தோறும் வரும் அஷ்டமி நாட்களில், சகஸ்ர தீப அலங்கார சேவை துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கர மடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இக்கோவிலில் பவுர்ணமி தோறும் நவ ஆவர்ண பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, மாதந்தோறும் வரக்கூடிய அஷ்டமி தினத்தன்று, சகஸ்ர தீப அலங்கார சேவை துவக்கப்பட்டுள்ளது. இச்சேவை நடைபெறும் நாட்களில் அஷ்டமி தினத்தன்று, இரவு 7:00 மணிக்கு உற்சவர் காமாட்சியம்மன் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.

அப்போது, காமாட்சி அம்மன் முன், 1,008 தீபங்கள் ஏற்றப்பட்டு, ஜோதி ஸ்வரூபமாய் அம்மன் காட்சியளிப்பார். பக்தர்கள் அஷ்டமியின்போது, அம்பாளை ஜோதிஸ்வரூபமாய் தரிசித்து, திருவருள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி முதன்முறையாக சகஸ்ர தீப அலங்கார சேவை துவக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us