sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

முறையாக இயக்கப்படாத அரசு பஸ் சாத்தணஞ்சேரி கிராமத்தினர் அவதி

/

முறையாக இயக்கப்படாத அரசு பஸ் சாத்தணஞ்சேரி கிராமத்தினர் அவதி

முறையாக இயக்கப்படாத அரசு பஸ் சாத்தணஞ்சேரி கிராமத்தினர் அவதி

முறையாக இயக்கப்படாத அரசு பஸ் சாத்தணஞ்சேரி கிராமத்தினர் அவதி


ADDED : டிச 26, 2024 12:56 AM

Google News

ADDED : டிச 26, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், த்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரியில் இருந்து, மெய்யூர் வழியாக, தடம் எண்: 'டி -9பி' என்ற அரசு பேருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது.

சாத்தணஞ்சேரி,சீட்டணஞ்சேரி, கரும்பாக்கம், மிளகர்மேனி,திருவானைக்கோவில், விச்சூர், சிதண்டிமண்டபம் உள்ளிட்ட கிராமத்தினர், இப்பேருந்தை பயன்படுத்தி செங்கல்பட்டுக்கு சென்று வருகின்றனர்.

தினமும் மூன்று முறை இயக்க வேண்டியஇப்பேருந்தை, ஒரு மாதமாக சரிவர இயக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சில நாட்கள் காலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் இயக்கப் படுவதில்லை.

மேலும், சில நாட்கள்நாள் முழுதும் இயக்கப் படுவதில்லை என,அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால், சாத்தணஞ்சேரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துதரப்பினரும் போக்குவரத்திற்கு சிரமப்பட்டுவருகின்றனர்.

எனவே, அரசு பேருந்தை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us