sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திறந்து மூன்றே மாதத்தில் பள்ளி கட்டடம் விரிசல்

/

திறந்து மூன்றே மாதத்தில் பள்ளி கட்டடம் விரிசல்

திறந்து மூன்றே மாதத்தில் பள்ளி கட்டடம் விரிசல்

திறந்து மூன்றே மாதத்தில் பள்ளி கட்டடம் விரிசல்


ADDED : பிப் 01, 2025 12:08 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் காரணை ஊராட்சி, வயலூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வகுப்பறை கட்டடம் பழுதடைந்து இருந்ததால், புதிய கட்டடம் கட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, 2021 -- 2022ம் நிதியாண்டில், பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ், 18.79 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டடம், மூன்று மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கட்டடத்தில் அங்காங்கே விரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த விரிசலின் வழியே, மழை பெய்யும் நேரத்தில் மழைநீர் கட்டடத்தில் கசிகிறது. இதனால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில், பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பள்ளி கட்டடத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை, துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us