/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.1.68 கோடியில் கட்டிய பள்ளி கட்டடங்கள் திறப்பு
/
ரூ.1.68 கோடியில் கட்டிய பள்ளி கட்டடங்கள் திறப்பு
ADDED : ஏப் 15, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லிபூந்தமல்லி நகராட்சி, மேல்மாநகரில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.
இங்கு, 1.68 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு கூடுதல் வகுப்பறைகள், இரண்டு அறிவியல் ஆய்வுக்கூடம் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த கட்டடத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பள்ளியில் நடந்த விழாவில், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, பூந்தமல்லி நகராட்சி தலைவர் காஞ்சனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.