sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளி மாணவர்கள் களப்பயணம் துவக்கம்

/

பள்ளி மாணவர்கள் களப்பயணம் துவக்கம்

பள்ளி மாணவர்கள் களப்பயணம் துவக்கம்

பள்ளி மாணவர்கள் களப்பயணம் துவக்கம்


ADDED : செப் 12, 2025 10:09 PM

Google News

ADDED : செப் 12, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் கல்லுாரி களப்பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.

நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 பயிலும், அரசு பள்ளி மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளுக்கு கல்லுாரி களப்பயணம் அழைத்துச் செல்லுமாறு, பள்ளி கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இந்த கல்லுாரி களப்பயணத்தின் அனுபவமானது மாணவர்களின் உயர்கல்வி குறித்த அச்சம், குழப்பங்களை களைந்து, உயர்கல்வி அனைவருக்கும் சாத்தியம் என்ற எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் உருவாகும் என்ற நோக்கில் துவங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 49 அரசு பள்ளிகளில் இருந்து 3,427 பள்ளி மாணவ, மாணவியரை கல்லுாரிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக, காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் காஞ்சிபுரம் கீழம்பி பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ்.கே.வி., பெண்கள் கல்லுாரிக்கு நேற்று களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த பயணத்தை கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us