sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒரு மாதமாக வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சிபுரத்தில் சுகாதார சீர்கேடு

/

ஒரு மாதமாக வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சிபுரத்தில் சுகாதார சீர்கேடு

ஒரு மாதமாக வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சிபுரத்தில் சுகாதார சீர்கேடு

ஒரு மாதமாக வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சிபுரத்தில் சுகாதார சீர்கேடு


ADDED : டிச 14, 2024 11:35 PM

Google News

ADDED : டிச 14, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் தாமல்வார் தெரு வழியாக கோனேரிகுப்பம், ஏனாத்துார் வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகம் நிறைந்த இச்சாலையில், இரு இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ‛மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், ஒரு மாதத்திற்கும் மேலாக சாலையில் வழிந்தோடி வருகிறது.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, வேகமாக செல்லும் வாகனங்களால் நடந்து செல்வோரின் ஆடைகளில் கழிவு நீர் தெளிக்கிறது. மாத கணக்கில் கழிவு நீர் வழிந்தோடுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

மேலும், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையும் சேதமடைகிறது. எனவே, தாமல்வார் தெருவில், பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us