sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சங்கரா கல்லுாரி

/

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சங்கரா கல்லுாரி

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சங்கரா கல்லுாரி

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சங்கரா கல்லுாரி


ADDED : மார் 28, 2025 08:23 PM

Google News

ADDED : மார் 28, 2025 08:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சென்னை உலகத் திருக்குறள் மையம் உலகம் தழுவிய நிலையில் திருக்குறள் குறித்து 100 இடங்களில், 100 தலைப்புகளில், 100 ஆய்வு மாநாடு நடத்தி 100 ஆய்வுகள் வெளியிடுவது என்ற முயற்சியில் ஈடுபட்டது.

இதில், காஞ்சிபுரம் விஜயலட்சுமி குணசேகரன் அறக்கட்டளையுடன் இணைந்து காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லுாரி பங்கேற்றது.

கடந்த ஜனவரி 27ம் தேதி உலகெங்கிலும் நடைபெற்ற இந்த உலகத் திருக்குறள் மாநாட்டில் சங்கரா கல்லுாரி 'திருவள்ளுவரின் மீட்பியல் சிந்தனைகள்' என்ற பொருண்மையில் ஆய்வு மாநாட்டை நடத்தியது. இவ்வாறு உலகெங்கிலும் ஒரே நேரத்தில் 95 இடங்களில் 95 தலைப்புகளில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டது.

ஒட்டுமொத்தமாக 1,429 பேர் ஆய்வுக்கட்டுரை வாசித்து, உலக சாதனையாக அங்கீகரிக்கப்பெற்று லண்டனில் இயங்கும் உலக சாதனை புத்தகத்தில் பதிவுசெய்யப்பெற்றுள்ளது. இதற்கான பாராட்டுச் சான்றிதழ் , சங்கரா கல்லுாரிக்கு வழங்கப்பட்டுள்ளது என, சங்கரா கல்லூரி முதல்வர் முனைவர் கலை ராம வெங்கடேசன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us