sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செங்கல்பட்டுக்கு சிற்றுந்து சேவை துவக்கம்

/

செங்கல்பட்டுக்கு சிற்றுந்து சேவை துவக்கம்

செங்கல்பட்டுக்கு சிற்றுந்து சேவை துவக்கம்

செங்கல்பட்டுக்கு சிற்றுந்து சேவை துவக்கம்


ADDED : ஜூன் 21, 2025 07:32 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 07:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்தணஞ்சேரி:சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி வரை செல்ல தனியார் சிற்றுந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, களியப்பேட்டை, ஒரக்காட்டுப்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் உத்திரமேரூர் ஒன்றியத்தின் கடைக்கோடியில் உள்ளன.

இந்த கிராமங்களைச் சேர்ந்தோருக்கு செங்கல்பட்டு முக்கிய நகர் பகுதியாக உள்ளது. மேலும், இந்த கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் இயங்கும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.

பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரும் செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற பகுதிகளில் உள்ள கல்வி கூடங்களுக்கு சென்று வருகின்றனர். வியாபாரிகள், வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்களது பணி சார்ந்து தினமும் செங்கல்பட்டு செல்கின்றனர்.

எனினும், சாத்தணஞ்சேரி சுற்றுவட்டாரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்ல போதுமான பேருந்து வசதி இல்லாத நிலை உள்ளது.

இதனால், செங்கல்பட்டு செல்ல கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த சாத்தணஞ்சேரி உள்ளிட்ட கிராம வாசிகள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, அரசு அனுமதி பெற்று சாத்தணஞ்சேரி துவங்கி சீட்டணஞ்சேரி, ஒரக்காட்டுப்பேட்டை வழியாக செங்கல்பட்டு மற்றும் கூடுவாஞ்சேரி வரை தனியார் சிற்றுந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us