sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சீதா கல்யாண மகோத்சவம் காஞ்சியில் விமரிசை

/

சீதா கல்யாண மகோத்சவம் காஞ்சியில் விமரிசை

சீதா கல்யாண மகோத்சவம் காஞ்சியில் விமரிசை

சீதா கல்யாண மகோத்சவம் காஞ்சியில் விமரிசை


ADDED : மே 05, 2025 01:10 AM

Google News

ADDED : மே 05, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் சீதாராம பஜனை மண்டலி சார்பில், 33வது ஆண்டு சீதா கல்யாண மகோத்சவம், காமாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள கொல்லாசத்திரம் திருமண மண்டபத்தில் நடந்தது.

உத்சவத்தையொட்டி, கடந்த 1ம் தேதி கணபதி ஹோமம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சீதா கல்யாணம் என்ற தலைப்பில், கடலுார் ப்ரும்மஸ்ரீ முரளிதர சர்மாஜி உபன்யாசம் நிகழ்த்தினார்.

கடந்த 2ம் தேதி கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம், சுவாசினி விளக்கு பூஜையும், மாலை 4:30 மணிக்கு ப்ரும்மஸ்ரீ ஞானகுரு பாகவதர் குழுவினரின் தோடயமங்களம் குருகீர்த்தனை மற்றும் அஷ்டபதி பஜனை நடந்தது.

நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம், தொடர்ந்து, ராமருக்கு லட்சார்ச்சனை, மஹாதீப ஆராதனையும், மதியம் 12:30 மணிக்கு அன்னதானமும், மாலை 4:30 மணிக்கு அஷ்டபதி மற்றும் தாசர் கீர்த்தனையும், இரவு 8:30 மணிக்கு திவ்யநாமம், டோலோத்ஸவம் நடந்தது.

நேற்று, காலை 7:00 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனையும், காலை 10:00 மணிக்கு பாகவத ஸம்ப்ரதாய முறைப்படி சீதா கல்யாண உத்சவமும், மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும், இரவு 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் உத்சவசம் நடந்தது.

இரு நாட்களாக நடந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஆயக்குடி ஆனந்த கிருஷ்ணன் என்கிற குமார் பாகவதர் குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us