/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு
ADDED : டிச 14, 2024 01:36 AM

ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஏழு அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கார்த்திகை தீபத்திபத்தை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணி சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்திலும், உற்சவர் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
ஏராளமான பக்தர்கள் வரிசையில் வந்து, அரோகரா கோஷத்துடன் முருகப் பெருமானை வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அரங்காவலர் குழு செய்தனர்.

