sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காமாட்சி அம்மன் கோவிலில் வசந்த உத்சவம் துவக்கம்

/

காமாட்சி அம்மன் கோவிலில் வசந்த உத்சவம் துவக்கம்

காமாட்சி அம்மன் கோவிலில் வசந்த உத்சவம் துவக்கம்

காமாட்சி அம்மன் கோவிலில் வசந்த உத்சவம் துவக்கம்


ADDED : ஜூன் 12, 2025 02:23 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும், வசந்த உத்சவம் துவங்கியது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான முதல்நாள் உத்சவம் நேற்று துவங்கியது. இதில், பல்வேறு மலர்கள், காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன், உற்சவர் காமாட்சி அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.

அம்மனுக்கு கோவில் ஸ்தானீகர்கள் வாயிலாக புஷ்பாஞ்சலி, பல்வேறு பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. சொற்பொழிவாளர் மாயவரம் ராகவன், 'காமாட்சி விலாசம்' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவும், கோவில் ஆஸ்தான வித்வான் தேசூர் ராஜரெத்தினம் மற்றும் காரைக்கால் வெங்கட சுப்பிரமணியனின் வயலின் இன்னிசை கச்சேரி ஆகியனவும் நடைபெற்றது.

உத்சவத்தில் காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகாரியம் சுந்தரேச அய்யர், சங்கர மடத்தின் மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன், கோவில் மணியக்காரர் சூரியநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us