/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீட்டில் மயங்கி விழுந்த மாணவி பலி
/
வீட்டில் மயங்கி விழுந்த மாணவி பலி
ADDED : நவ 11, 2025 10:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்: -மானாம்பதி கண்டிகை யில், வீட்டில் மயங்கி விழுந்த கல்லுாரி மாணவி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
மானாம்பதி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 55. இவ ருடைய மகளான திவ்யா, 18; என்பவர், செய்யாரிலுள்ள தனியார் கல்லலுாரியில், இரண்டாமாண்டு பொருளாதாரம் படித்து வந்தார்.
திவ்யா ஒராண்டாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வீட்டில் இருந்தபோது, திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.
திவ்யாவை மீட்டு, மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

