sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் நாளை மறுதினம் கோடைக்கால பயற்சி துவக்கம்

/

காஞ்சியில் நாளை மறுதினம் கோடைக்கால பயற்சி துவக்கம்

காஞ்சியில் நாளை மறுதினம் கோடைக்கால பயற்சி துவக்கம்

காஞ்சியில் நாளை மறுதினம் கோடைக்கால பயற்சி துவக்கம்


ADDED : ஏப் 22, 2025 11:50 PM

Google News

ADDED : ஏப் 22, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், நாளை மறுதினம் முதல், மே 15ம் தேதி வரை 21 நாட்கள், காலை 6:30 மணி முதல், 8:30 மணி வரையிலும் மற்றும் மாலை 4:30 மணி முதல், 6:30 மணி வரையிலும் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தடகளம், இறகுபந்து, கைப்பந்து, ஜூடோ, கபடி, டென்னிஸ், கால்பந்து, ஹாக்கி மற்றும் கூடைபந்து போன்ற விளையாட்டுகள் நடைபெற உள்ளன.

இப்பயிற்சியில் பங்கேற்கும் மாணவ - மாணவியர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திட்டங்கள் மற்றும் போட்டிகள் குறித்தும் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

மேலும், முறையான பயிற்சியும் ஊட்டச்சத்தான சிற்றுண்டியும் வழங்கப்படும். மேலும், பயிற்சி முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 18 வயதிற்குட்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ - மாணவியர் மற்றும் மாணவர் அல்லாதவர்களும் பங்கேற்கலாம்.

இப்பயிற்சி முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது பெயர் விபரங்களை, அலுவலக வேலை நேரத்தில், காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை நேரடியாகவும் அல்லது மொபைல் வாயிலாகவும் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் பெயர்களை பதிவு செய்ய மற்றும் கூடுதல் விபரங்களுக்கு 74017 03481 என்ற மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us