sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 12 லட்சம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கல்

/

 12 லட்சம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கல்

 12 லட்சம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கல்

 12 லட்சம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கல்


ADDED : நவ 14, 2025 12:39 AM

Google News

ADDED : நவ 14, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 14.22 லட்சம் வாக்காளர்களில், 12 லட்சம் பேருக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தல் கமிஷன் உத்திரவின்பேரில், தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடைபெற்று வருகிறது.

வாக்காளர் திருத்தப்பணிக்காக வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், புகைப்படம் அச்சடிக்கப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை சம்பந்தப்பட்ட ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று, கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் வழங்கி வருகின்றனர்.

இப்பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,401 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளில் கணக்கெடுப்பு படிவம் வழங்கி வருகின்றனர்.

அவர்களை கண்காணிக்க 145 மேற்பார்வையாளர்களும், 145 கூடுதல் மேற்பார்வையாளர்களும் மற்றும் மண்டல வாரியாக துணை கலெக்டர் நிலையில் 10 கண்காணிப்பு அலுவலர்களும், இவர்களை கண்காணிக்க 4 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 11 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் உள்ள 14.22 லட்சம் வாக்காளர்களில், நேற்று வரை, 12 லட்சம் வாக்காளர்களுக்கு, வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிஜிட்டல் மயமாக்கல் பணிகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு, நிரப்பப்பட்ட படிவங்கள் திரும்ப பெற்று, மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.






      Dinamalar
      Follow us