/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊஞ்சல் சேவை உத்சவம் கருக்கினில் அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை உத்சவம்
/
ஊஞ்சல் சேவை உத்சவம் கருக்கினில் அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை உத்சவம்
ஊஞ்சல் சேவை உத்சவம் கருக்கினில் அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை உத்சவம்
ஊஞ்சல் சேவை உத்சவம் கருக்கினில் அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை உத்சவம்
ADDED : ஏப் 13, 2025 02:00 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், பல்லவ மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி வெள்ளியன்று லட்சதீப பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் லட்சதீப பெருவிழா நடந்தது.வி ழாவையொட்டி மூலவர், உத்சவர் அம்மனுக்கு விஸ்வரூப பூப்பந்தலும், ஒரு லட்சத்திற்கு புதிய ரூபாய் நோட்டுகளால், நுழைவாயில் முதல் மூலவர் சன்னிதி வரை அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து உத்சவர் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை உற்சவமும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் பரம்பரை தர்மகர்த்தா மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

