sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளியில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து ஆசிரியர் காயம்

/

பள்ளியில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து ஆசிரியர் காயம்

பள்ளியில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து ஆசிரியர் காயம்

பள்ளியில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து ஆசிரியர் காயம்


ADDED : ஆக 23, 2025 01:17 AM

Google News

ADDED : ஆக 23, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கட்டடத்தின் மேல் பகுதியில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் ஆசிரியர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் சீனிவாசன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் கட்டடம் கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கட்டடத்தின் பல இடங்களில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுவது வாடிக்கையாகிவிட்டது.

கூரை பூச்சு பல இடங்களில் பெயர்ந்து விழுந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, பள்ளியின் கூரை பூச்சு நேற்றும் பெயர்ந்து விழுந்துள்ளது. ஆசிரியர் ஒருவர் மீது விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

அதிர்ஷடவசமாக மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இப்பள்ளியின் பராமரிப்பு பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் அடிக்கடி மேற்கொள்வதாக கூறினாலும், இப்பள்ளி கட்டடத்தின் தரம் மோசமான நிலையில் இருப்பதாகவே பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, 18வது வார்டு கவுன்சிலர் மல்லிகா, மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.






      Dinamalar
      Follow us