/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று தை மாத மகம் உற்சவம்
/
யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று தை மாத மகம் உற்சவம்
யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று தை மாத மகம் உற்சவம்
யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று தை மாத மகம் உற்சவம்
ADDED : ஜன 16, 2025 07:17 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு, ஆண்டுதோறும் தை மாதம், மகம் நட்சத்திர தினத்தன்று உற்சவம் நடைபெறும்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான உற்சவம், இன்று நடக்கிறது. விழாவையொட்டி, இன்று காலை 5:30 மணிக்கு, பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகள், சதாவரம், கண்ணகிபுரம், அண்ணா நெசவாளர் குடியிருப்பு, சின்ன அய்யங்குளம், ஓரிக்கை வழியாக, பாலாற்றில் போடப்பட்டிருக்கும் பந்தலில் எழுந்தருள்கிறார்.
அங்கு, சுவாமிக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து, மஹா பெரியவா மணிமண்டபம், வேளிங்கப்பட்டரை, தேசிகர் கோவில் வழியாக, மாலை 6:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தபின், திருமழிசை ஆழ்வார் சாற்றுமறை நடக்கிறது.