/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்றங்கரையோர கிராமங்களில் நவரை பருவ விவசாய பணி துவக்கம்
/
பாலாற்றங்கரையோர கிராமங்களில் நவரை பருவ விவசாய பணி துவக்கம்
பாலாற்றங்கரையோர கிராமங்களில் நவரை பருவ விவசாய பணி துவக்கம்
பாலாற்றங்கரையோர கிராமங்களில் நவரை பருவ விவசாய பணி துவக்கம்
ADDED : நவ 25, 2025 04:09 AM

குருவிமலை: காஞ்சிபுரம் பாலாற்றங்கரையோர கிராமங்களில், நிலத்தடிநீரை பயன்படுத்தி, நவரை பருவத்திற்கான, நெல் சாகுபடி செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆறு, ஏரி மற்றும் நிலத்தடிநீரை பயன்படுத்தி சொர்ணவாரி, சம்பா, பின் சம்பா, நவரை, மானாவாரி, பகுதி மானாவாரி உள்ளிட்ட பருவத்தில், ஏ.டி.டி., 36, 37, ஐ.ஆர்.50, கோ 43, கோ 51, குண்டு, வெள்ளை பொன்னி உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதேபோல, கிணறுகளிலும் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
இதனால், விவசாயத்திற்கு தேவையான நிலத்தடி நீர் தாராளமாக கிடைப்பதால், காஞ்சிபுரம் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள குருவிமலை, களக்காட்டூர், விச்சந்தாங்கல், பெரியாநத்தம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள், நிலத்தடி நீரை பயன்படுத்தி, நவரை பட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் பணியை துவக்கி உள்ளனர்.
இதில், இயந்திரம் மூலம் ஏர் உழுதல், உழுத வயலை சமன்படுத்துவதற்காக உழவு மாடு மூலம் பரம்பு ஓட்டுதல், வரப்பு அண்டை வெட்டுதல் உள்ளிட்ட விவசாய பணியை துவக்கியுள்ளனர்.

