sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மழைக்கு ஒழுகும் பஸ் நேர காப்பாளர் அலுவலகம் ஆவணங்கள் நனைந்து சேதமாகும் சூழல்

/

மழைக்கு ஒழுகும் பஸ் நேர காப்பாளர் அலுவலகம் ஆவணங்கள் நனைந்து சேதமாகும் சூழல்

மழைக்கு ஒழுகும் பஸ் நேர காப்பாளர் அலுவலகம் ஆவணங்கள் நனைந்து சேதமாகும் சூழல்

மழைக்கு ஒழுகும் பஸ் நேர காப்பாளர் அலுவலகம் ஆவணங்கள் நனைந்து சேதமாகும் சூழல்


ADDED : ஜூலை 27, 2025 12:42 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், தடம் எண்.79, அரசு பேருந்துகளுக்கான நேர காப்பாளர் அலுவலக கூரை, மழைக்கு ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகும் சூழல் உள்ளது.

காஞ்சிபுரம் பேருந்து நிலைய அலுவலக கூரையின் ஒரு பகுதியில், காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் பகுதிக்கு இயக்கப்படும் தடம் எண்79, அரசு பேருந்துக்கான நேர காப்பாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.

இங்கு, தினமும் பணிமனை மேலாளர், பேருந்து நிலைய உதவி பொறியாளர், நேர காப்பாளர், பேருந்து நடத்துனர், டிரைவர், பேருந்து வந்து செல்லும் விபரம் அறிய வரும் பயணியர் என, நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த அலுவலகத்தின் கூரை மழைக்கு ஒழுகுவதால், அதிலிருந்து கசியும் மழைநீர், நேர காப்பாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. மேலும், கான்கிரீட் பெயர்ந்து உதிர்ந்து வருவதால், நாளடைவில் கூரை முழுதும் வலுவிழக்கும் சூழல் உள்ளது.

எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், மழைக்கு ஒழுகும், தடம் எண்79, அரசு பேருந்துகளுக்கான நேர காப்பாளர் அலுவலக கூரையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us