sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தி.மு.க., நிர்வாகியுடன் தகராறு காதை கடித்து துப்பிய ஓட்டுனர்

/

தி.மு.க., நிர்வாகியுடன் தகராறு காதை கடித்து துப்பிய ஓட்டுனர்

தி.மு.க., நிர்வாகியுடன் தகராறு காதை கடித்து துப்பிய ஓட்டுனர்

தி.மு.க., நிர்வாகியுடன் தகராறு காதை கடித்து துப்பிய ஓட்டுனர்


ADDED : மார் 06, 2024 12:21 AM

Google News

ADDED : மார் 06, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் திருவள்ளூர் அடுத்த, தண்ணீர்குளம் ஊராட்சியைச் சேர்ந்தவர் தயாளன், 60; தி.மு.க., கிளைச் செயலர். இவரது மனைவி தேவி, தண்ணீர்குளம் ஊராட்சி தலைவர்.

இங்குள்ள குறிஞ்சி சி.பி.எஸ்.சி., பள்ளி அருகே குடியிருப்புகள் பகுதியில், 'பேவர் பிளாக்' சாலை அமைக்கும் பணி, சில தினங்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகாலிங்கம், 42, சாலை உயரமாக இருப்பதால், ஆட்டோ வர முடியாது எனவும், முறையாக அமைக்க வேண்டும் எனவும் கூறி, நேற்று முன்தினம், தயாளனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த மகாலிங்கம், தயாளனின் காதை கடித்து துப்பினார். துண்டாகி விழுந்த

காதை எடுத்துக் கொண்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, தயாளன் விரைந்தார். காதை மீண்டும் பொருத்துவதற்கு முயன்றார். நேரம் கடந்ததால் முதலுதவி சிகிச்சை பெற்று, அங்கிருந்து, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தயாளனை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, தயாளன் மகன் தியாகுசந்தர் அளித்த புகாரின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மகாலிங்கத்தை கைது செய்தனர்.

செயற்கை காது ஒட்ட திட்டம்

உறுப்புகள் சேதமடைந்தால், ஒரு மணி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தகுந்த சிகிச்சை மேற்கொண்டால், அவற்றை சீரமைத்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், உடனே திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்றும், மீண்டும் காது பொருத்த முடியாமல் போனது.அங்குள்ள மருத்துவரிடம் கேட்ட போது, கூறியதாவது: 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்வதற்கான வசதி இருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு முழு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை துவக்க கூடுதல் நேரமாகும் என கூறியதால், பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனை சிகிச்சையை விரும்பி, அங்கு சென்று விட்டார்.இவ்வாறு அவர் கூறினார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தயாளனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், 'அவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு இருப்பதால் துண்டிக்கப்பட்ட காதை, உடனடியாக மீண்டும் ஒட்ட வைக்க முடியாது' என கூறியதாக தெரிகிறது. எனவே செயற்கை காது பொருத்த தயாளனின் உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.








      Dinamalar
      Follow us