/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தி.மு.க., நிர்வாகியுடன் தகராறு காதை கடித்து துப்பிய ஓட்டுனர்
/
தி.மு.க., நிர்வாகியுடன் தகராறு காதை கடித்து துப்பிய ஓட்டுனர்
தி.மு.க., நிர்வாகியுடன் தகராறு காதை கடித்து துப்பிய ஓட்டுனர்
தி.மு.க., நிர்வாகியுடன் தகராறு காதை கடித்து துப்பிய ஓட்டுனர்
ADDED : மார் 06, 2024 12:21 AM

திருவள்ளூர் திருவள்ளூர் அடுத்த, தண்ணீர்குளம் ஊராட்சியைச் சேர்ந்தவர் தயாளன், 60; தி.மு.க., கிளைச் செயலர். இவரது மனைவி தேவி, தண்ணீர்குளம் ஊராட்சி தலைவர்.
இங்குள்ள குறிஞ்சி சி.பி.எஸ்.சி., பள்ளி அருகே குடியிருப்புகள் பகுதியில், 'பேவர் பிளாக்' சாலை அமைக்கும் பணி, சில தினங்களாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகாலிங்கம், 42, சாலை உயரமாக இருப்பதால், ஆட்டோ வர முடியாது எனவும், முறையாக அமைக்க வேண்டும் எனவும் கூறி, நேற்று முன்தினம், தயாளனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த மகாலிங்கம், தயாளனின் காதை கடித்து துப்பினார். துண்டாகி விழுந்த
காதை எடுத்துக் கொண்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, தயாளன் விரைந்தார். காதை மீண்டும் பொருத்துவதற்கு முயன்றார். நேரம் கடந்ததால் முதலுதவி சிகிச்சை பெற்று, அங்கிருந்து, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தயாளனை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, தயாளன் மகன் தியாகுசந்தர் அளித்த புகாரின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மகாலிங்கத்தை கைது செய்தனர்.

