/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பால தர்மசாஸ்தா கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
/
பால தர்மசாஸ்தா கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
பால தர்மசாஸ்தா கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
பால தர்மசாஸ்தா கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
ADDED : நவ 08, 2025 12:58 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா கோவிலில் 8ம் ஆண்டு பிரதிஷ்டை தினம், கலசாபிஷேகம், திருக்கல்யாண உத்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள பாலதர்ம சாஸ்தா கோவிலில் 8ம் ஆண்டு பிரதிஷ்டை தினம், திருக்கல்யாண உத்சவம் நேற்று காலை 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதில், பகவான் பாண்டுரங்கன், பன்னக சயனம் குருசாமி ஆகியோர் கொடிமரத்தில் கொடியேற்றினர். மாலை 5:00 மணிக்கு சித்தி, புத்தி சமேத கற்பக விநாயகர் திருக்கல்யாண வைபவமும், தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடந்தன.
இன்று, இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உத்சவமும், நாளை, காலை 9:30 மணிக்கு புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு திருக்கல்யாண உத்சவமும் 10ம் தேதி மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண உத்சவமும் நடக்கிறது.
விழா நிறைவாக வரும் 11ம் தேதி காலை 10:00 மணிக்கு பிரதிஷ்டை தினம், புத்திர மூலமந்திர ஹோமம், 1008 சஹஸ்ரநாமம், கலச புறப்பாடும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு பாலதர்ம சாஸ்தா வீதியுலா நடைபெறுகிறது.

