sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பொது இயக்க அட்டை டிக்கெட் கருவியில் இல்லை

/

பொது இயக்க அட்டை டிக்கெட் கருவியில் இல்லை

பொது இயக்க அட்டை டிக்கெட் கருவியில் இல்லை

பொது இயக்க அட்டை டிக்கெட் கருவியில் இல்லை


ADDED : மார் 01, 2024 11:35 PM

Google News

ADDED : மார் 01, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மாநகர போக்குவரத்து கழகத்தில் பயணியருக்கு டிக்கெட் வழங்க, புதிய வகை மின்னணு டிக்கெட் கருவி, கடந்த 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 130 மாநகர பேருந்துகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த கருவி வாயிலாக, பேருந்துகளில் வழங்கப்பட்ட டிக்கெட் விபரங்கள், வசூல் தொகை, பணிமனைகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக தெரியவரும்.

பயணியர் எண்ணிக்கை, அவர்கள் பயணிக்கும் துாரம், பேருந்துகளில் காலி இருக்கைகள், பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுகின்றனவா போன்ற விபரங்களை, போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள், உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

ஆனால், மெட்ரோ ரயில் பயணியர் உபயோகிக்கும் 'தேசிய பொது இயக்க அட்டை'யை, இக்கருவிகளில் பயன்படுத்துவதற்காகன வசதி இடம் பெறவில்லை. இது, பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

முதற்கட்டமாக, பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனையில் இருந்து இயக்கப்படும் 130 மாநகர பேருந்துகளில், புதிய மின்னணு டிக்கெட் கருவி சேவை துவங்கப்பட்டுள்ளது. சில மாதங்களில், படிப்படியாக அனைத்து பணிமனை பேருந்துகளில் விரிவுப்படுத்தப்படும்.

டெபிட், கிரடிட் கார்டுகள், மொபைல் செயலியான 'ஜிபே' போன்றவற்றின் வாயிலாக கட்டணம் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

மெட்ரோவில் பயன்படுத்தப்படும் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தும்வகையில், சில மாற்றங்கள் செய்து வருகிறோம். சில வாரங்களில் இந்த பணியும்முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us