sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாதை வசதி இல்லாத சுடுகாடு வயல்வெளியில் செல்லும் அவலம்

/

பாதை வசதி இல்லாத சுடுகாடு வயல்வெளியில் செல்லும் அவலம்

பாதை வசதி இல்லாத சுடுகாடு வயல்வெளியில் செல்லும் அவலம்

பாதை வசதி இல்லாத சுடுகாடு வயல்வெளியில் செல்லும் அவலம்


ADDED : ஜன 28, 2025 07:45 PM

Google News

ADDED : ஜன 28, 2025 07:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் காரணை ஊராட்சியில், 2,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, உள்ளம்பாக்கம், வயலூர், காரணி மண்டபம், நடுப்பட்டு, மேட்டுப்பாளையம், நரிக்குறவர் காலனி, நோனம்பூண்டி ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.

காரணை பகுதியில் உள்ள சுடுகாடு செல்ல பாதை வசதி இல்லாமல் உள்ளது. இதனால், சுடுகாடு இருந்தும், பாதை வசதி இல்லாததால், தனிநபர்களின் விவசாய நிலத்தின் மீது, இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது.

மேலும், தனிநபர்களின் விளைநிலங்களில் நெற்பயிர் நடவு செய்யும் நேரங்களில், இறந்தவர்களின் உடலை நெற்பயிரின் மீதே சுமந்து செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து அப்பகுதிவாசிகள், மாவட்ட குறைதீர் கூட்டத்தில் பலமுறை மனு அளித்துள்ளனர்.

ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காரணை சுடுகாட்டிற்கு பாதை வசதி ஏற்படுத்தி தர, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us