sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காலீஸ்வரர் கோவில் மண்டபம் சிதிலமடைந்து வரும் அவலம்

/

காலீஸ்வரர் கோவில் மண்டபம் சிதிலமடைந்து வரும் அவலம்

காலீஸ்வரர் கோவில் மண்டபம் சிதிலமடைந்து வரும் அவலம்

காலீஸ்வரர் கோவில் மண்டபம் சிதிலமடைந்து வரும் அவலம்


ADDED : ஜன 21, 2025 01:01 AM

Google News

ADDED : ஜன 21, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்

உத்திரமேரூர் ஒன்றியம் சீட்டணஞ்சேரி கிராமத்தில், பழமை வாய்ந்த சிவகாம சுந்தரி சமேத காலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில், சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இங்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து, தினமும் பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த கோவிலுக்கு சொந்தமான மண்டபம் ஒன்று உள்ளது. இதில், அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்துவந்தன.

தற்போது, மண்டபம் பராமரிப்பு இல்லாமலும், சிலைகள் சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. மேலும், மண்டப சுவர்களில் அரசமரச் செடிகள் வளர்ந்துள்ளன.

இதனால், மண்டப கட்டடம் நாளுக்கு நாள் வலுவிழந்து, சேதமடைந்தும் வருகிறது. எனவே, சிதிலமடைந்து வரும் காலீஸ்வரர் கோவில் மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us