/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேலை நிறுத்த போராட்டத்தால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை
/
வேலை நிறுத்த போராட்டத்தால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை
வேலை நிறுத்த போராட்டத்தால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை
வேலை நிறுத்த போராட்டத்தால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை
UPDATED : ஜூலை 10, 2025 01:16 AM
ADDED : ஜூலை 10, 2025 01:07 AM

காஞ்சிபுரம்:மத்திய அரசை எதிர்த்து, 13 தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தால், காஞ்சிபுரத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. அரசு பேருந்துகள் 100 சதவீதம் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசை எதிர்த்து நேற்று, 13 தொழிற்சங்கத்தினர், பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், காஞ்சிபுரத்தில் வழக்கம்போல அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கடைகள், வணிக வளாகங்கள் திறந்திருந்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று பணிமனைகளிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள 460 பேருந்துகளும் இயக்கப்பட்டதன் மூலம், 100 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டதாக அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டல அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.