sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

1.69 லட்சம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி இலக்கு வரும் 16 முதல் துவக்கம்

/

1.69 லட்சம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி இலக்கு வரும் 16 முதல் துவக்கம்

1.69 லட்சம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி இலக்கு வரும் 16 முதல் துவக்கம்

1.69 லட்சம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி இலக்கு வரும் 16 முதல் துவக்கம்


ADDED : டிச 10, 2024 08:37 AM

Google News

ADDED : டிச 10, 2024 08:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான, கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் வாயிலாக விவசாயிகளுக்கு கால்நடை இறப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

மேலும், பால் உற்பத்தி குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர்.

எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போட வேண்டியது அவசியம்.

கோமாரி என்பது குளிர்கால நோய். பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால், கோமாரி நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டது.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1,69,200 பசு, எருமை, கன்று ஆகிய கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், ஆறாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி, டிசம்பர் 16 முதல், 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி தவறாமல் போட்டுகொள்ள வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us