/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.23 கோடியில் சீரமைத்தும் மீண்டும் சேதம் கோரைப்புற்கள் சூழ்ந்த கோவில் தெப்பக்குளம்
/
ரூ.23 கோடியில் சீரமைத்தும் மீண்டும் சேதம் கோரைப்புற்கள் சூழ்ந்த கோவில் தெப்பக்குளம்
ரூ.23 கோடியில் சீரமைத்தும் மீண்டும் சேதம் கோரைப்புற்கள் சூழ்ந்த கோவில் தெப்பக்குளம்
ரூ.23 கோடியில் சீரமைத்தும் மீண்டும் சேதம் கோரைப்புற்கள் சூழ்ந்த கோவில் தெப்பக்குளம்
ADDED : டிச 13, 2025 05:50 AM

அய்யங்கார்குளம்: காஞ்சிபுரம் அய்யங்கார்குளம் கிராமத்தில், 23 லட்சம் ரூபாய் செலவில் துார்வாரி சீரமைக்கப்பட்ட கைலாசநாதர் கோவில் தெப்பக்குளத்தில் வளர்ந்துள்ள கோரைப்புற்களை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமத்தில், பழமையான கைலாசநாதர் கோவில் உள்ளது. அருகில், கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, 2022ம் ஆண்டு ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 23 லட்ச ரூபாய் செலவில் குளம் துார்வாரப்பட்டு, படிகள் அமைத்து குளக்கரை பலப் படுத்தப்பட்டது.
இந்நிலையில், கோவில் நிர்வாகம் குளத்தை முறையாக பராமரிக்காததால், கோரைப்புற்கள் வளர்ந்துள்ளன.
இதே நிலை நீடித்தால், குளத்தில் நீர்பிடிப்பு பகுதி முழுதும் கோரைப்புற்கள் காடுபோல வளரும் சூழல் உள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட குளம், கோரைப்புற்களால் சீரழிந்து வருகிறது.
எனவே, கைலாசநாதர் கோவில் தெப்ப குளத்தில் வளர்ந்துள்ள கோரைப்புற்களை அகற்ற, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

