sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவில் மண்டபத்தில் செடிகள் சிற்பங்கள் சேதமாகும் அபாயம்

/

கோவில் மண்டபத்தில் செடிகள் சிற்பங்கள் சேதமாகும் அபாயம்

கோவில் மண்டபத்தில் செடிகள் சிற்பங்கள் சேதமாகும் அபாயம்

கோவில் மண்டபத்தில் செடிகள் சிற்பங்கள் சேதமாகும் அபாயம்


ADDED : ஜூலை 16, 2025 12:36 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நான்கு கால் மண்டபத்தில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்றது ஏகாம்பரநாதர் கோவில். இதன் பிரதான ராஜ கோபுரத்திற்கும், 16 கால் மண்டபத்திற்கும் இடையே, நான்கு கால் மண்டபம் உள்ளது.

அழகிய புடைப்பு சிற்பங்கள் நிறைந்த இம்மண்டபத்தை, கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், மண்டபத்தின் கூரையில் அரசமர செடிகள் முளைத்துள்ளன.

செழித்து வளரும் இச்செடிகளின் வேர்களால், நான்கு கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாவதுடன், நாளடைவில் மண்டபம் முற்றிலும் வலுவிழந்து, இடிந்து விழும் அபாயம் உள்ளது.

எனவே, நான்கு கால் மண்டபத்தில் வளர்ந்து வரும் அரசமர செடிகளை வேருடன் அகற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us