sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாங்காடில் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வாகியும் பணி நடக்காததால் சிரமம்

/

மாங்காடில் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வாகியும் பணி நடக்காததால் சிரமம்

மாங்காடில் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வாகியும் பணி நடக்காததால் சிரமம்

மாங்காடில் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வாகியும் பணி நடக்காததால் சிரமம்


ADDED : பிப் 21, 2024 10:14 PM

Google News

ADDED : பிப் 21, 2024 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:மாங்காடு பகுதியில்,காமாட்சி அம்மன் கோவில், நவக்கிரகங்களில் சுக்கிரன் தலமாக விளங்கும் வெள்ளீஸ்வரர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் ஆகியவை உள்ளன.

இக்கோவில்களுக்கு, பல்வேறு நகரங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மாங்காடு சுற்றி, ஏராளமான குடியிருப்புகள், தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் அதிகரித்து வருகின்றன. இங்குள்ள பலர் அரசு, தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

இந்நிலையில், மாங்காட்டில் பேருந்து நிலையம் இல்லை. இதனால், பேருந்துகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

தாம்பரம், பல்லாவரம், குன்றத்துாரில் இருந்து பூந்தமல்லி, ஆவடி செல்லும் போருந்துகள், சாலையோரம் பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.

இதனால், மாங்காட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.

இதற்கு தீர்வாக, குன்றத்துார் - -குமணன்சாவடி சாலை மாங்காட்டில், காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவானது.

ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்புதல் பெற்ற இந்நிலத்தில் பேருந்து நிலையம் அமைப்பது குறித்து, நகராட்சி கூட்டத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டது.

ஆனால் இதுவரை, அதற்கான பணிகள் துவங்காததால், நெரிசலில் சிக்கியும், பேருந்து நிலையத்தில் நிற்கு வசதியின்றி, மக்கள் அவதிப்படுகின்றனர். பணிகளை வேகப்படுத்த வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மாங்காடு நகராட்சி தலைவர் சுமதி கூறுகையில், ''பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிலம் வரையறை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அப்பணி முடிந்ததும், அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us