sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இரு வீடுகளில் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டால் பீதி

/

இரு வீடுகளில் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டால் பீதி

இரு வீடுகளில் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டால் பீதி

இரு வீடுகளில் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டால் பீதி


ADDED : ஜன 05, 2025 01:37 AM

Google News

ADDED : ஜன 05, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெண்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பிள்ளை, 73. இவர், நேற்று முன்தினம் இரவு, மனைவி மல்லிகா, 68, என்பவருடன், வீட்டு தாழ்வாரத்தில் தூங்கி கொண்டிருந்தார்.

காலை எழுந்து பார்த்தப்போது, பீரோ உடைக்கப்பட்டு, 7 சவரன் நகை மற்றும் 32,000 ரூபாயை திருடு போனது தெரிந்தது. அதேபோல், அதே பகுதியில் உள்ள ராமாஞ்சியம்மாள், 72, என்பவரின் வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டில் இருந்த இரு வெள்ளி குத்துவிளக்கு, ஒரு காமாட்சி விளக்கு மற்றும் ஒரு வெள்ளித்தட்டு ஆகியவை மர்ம நபர்கள் திருடி சென்றனர். உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். உத்திரமேரூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால், அப்பகுதிவாசிகள் பீதியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us