/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'ஏர்டெல்' ஆபீசில் திருடியோர் சிக்கினர்
/
'ஏர்டெல்' ஆபீசில் திருடியோர் சிக்கினர்
ADDED : நவ 12, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஆவடி புதிய ராணுவ சாலையில், 'ஏர்டெல்' தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது.
செப்.,26ம் தேதி காலை, வழக்கம் போல் ஊழியர்கள் கடையை திறக்க சென்றபோது, 'ஷட்டர்' பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 5 'லேப்டாப்' மற்றும் ஒரு மொபைல் போன் திருடு போனது தெரிந்தது.
ஆவடி போலீசார் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவர்கள், புட்லுாரைச் சேர்ந்த வெங்கடேஷ், 19, என்பவரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

