/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருக்காலிமேடில் தீமிதி திருவிழா
/
திருக்காலிமேடில் தீமிதி திருவிழா
ADDED : செப் 16, 2025 12:31 AM

காஞ்சிபுரம்;திருக்காலிமேடு பெரியபாளையத்தம்மன் கோவிலில், 35வது ஆண்டு தீமிதி திருவிழா விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பெரியபாளையத்தம்மன் கோவிலில், 35வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா மற்றும் தீமிதி திருவிழா, கடந்த 8ம் தேதி காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்கியது.
இதில், நேற்று முன்தினம், காலை 6:00 மணிக்கு அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடந்தது. இரவு 8:30 மணிக்கு தீமிதி திருவிழா துவங்கியது.
இதில், காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தீமிதித்தனர். இரவு 11:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் சின்ன வேப்பங்குளக்கரை, சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில் வழியாக வீதியுலா வந்தார்.