/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரிவாய் மணவாளருக்கு நாளை திருக்கல்யாண உற்சவம்
/
ஏரிவாய் மணவாளருக்கு நாளை திருக்கல்யாண உற்சவம்
ADDED : மார் 20, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முத்தியால்பேட்டை:காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில், கமலவல்லி சமேத அழகிய மணவாள பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, 2022ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
இதையொட்டி நாளை இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
விழாவையொட்டி, நாளை, காலை 8:00 மணிக்கு வருஷாபிஷேகமும், புஷ்பசாத்துபடியும், மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசையும், தொடர்ந்து 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.

