/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமுக்கூடல் பள்ளி முதல்முறையாக 100 சதவீதம் தேர்ச்சி
/
திருமுக்கூடல் பள்ளி முதல்முறையாக 100 சதவீதம் தேர்ச்சி
திருமுக்கூடல் பள்ளி முதல்முறையாக 100 சதவீதம் தேர்ச்சி
திருமுக்கூடல் பள்ளி முதல்முறையாக 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 01:21 AM

திருமுக்கூடல்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று 2024 -25ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொது தேர்வை மாணவ - மாணவியர் எழுதினர்.
நேற்று முடிவுகள் வெளியான நிலையில், தேர்வு எழுதிய அனைத்து மாணவ -- மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனால், திருமுக்கூடல் அரசு உயர்நிலைப் பள்ளி முதன்முறையாக 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை பெற்றுள்ளது.
இதையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர், உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்களை, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் அப்பகுதி ஊராட்சி தலைவர் மஞ்சுளா ஆகியோர் நேற்று பள்ளிக்கு நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.