/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து மூவர் பலி
/
கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து மூவர் பலி
ADDED : ஆக 13, 2025 01:55 AM

பள்ளிப்பட்டு: ஆந்திராவில் இருந்து பள்ளிப்பட்டு நோக்கி வந்த கார், பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், குழந்தை உட்பட மூவர் பலியானார்.
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கோவிந்தரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேர், 'கியா சோனட்' காரில், சித்துார் --- தச்சூர் ஆறுவழிச் சாலை மார்க்கமாக, பள்ளிப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
திருமலைராஜபேட்டை அருகே வந்த போது, சாலையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில், பத்மா, 60, என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் ஓட்டுநர் விஸ்வநாதன், 50, ரேகா, 35, சிட்டம்மா, 52, கீர்த்தி, 26, கீர்த்தியின் ஒன்பது மாத குழந்தை சான்விக் என ஐந்து பேர், படுகாயம் அடைந்தனர். ராணிப்பேட்டை சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த விஸ்வநாதன் மற்றும் குழந்தை சான்விக் ஆகியோர் உயிரிழந்தனர்.