/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது
/
கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது
ADDED : நவ 24, 2024 07:48 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அருகே கஞ்சா கடத்தியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
உத்திரமேரூர் அடுத்த, தண்டரை கூட்ரோடு பகுதியில், பெருநகர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 'யமஹா எப்.இசட்.' டூ - -வீலரில் வந்த, மூன்று பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், அவர்கள் 1,200 கிராம் கஞ்சா வைத்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், டூ - -வீலரில் வந்த தண்டரை கிராமத்தைச் சேர்ந்த, சுபாஷ், 24, அகில்குமார், 21, நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த புவன்ரோஷித், 23, ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, டூ - -வீலரை பறிமுதல் செய்தனர்.