நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
குருவார பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று, மாலை 5:00 மணி அளவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதை தொடர்ந்து, அம்பாளுடன் பிரதோஷ மூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல, படுநெல்லி சந்திரமவுலீஸ்வரர், விஷகண்டிகுப்பம் சக்தீஸ்வரர், கோவிந்தவாடி கைலாசநாதர் ஆகிய கோவில்களில், குருவார பிரதோஷம் வெகு விமரிசையாக நடந்தன.