/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கன்டெய்னரில் தீக்கிரையான 'டிஷ்யூ பேப்பர்'
/
கன்டெய்னரில் தீக்கிரையான 'டிஷ்யூ பேப்பர்'
ADDED : டிச 20, 2024 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:ஹரியானா மாநிலத்தில் இருந்து, சென்னை முகலிவாக்கம் பகுதியில் உள்ள கிடங்கிற்கு, 'டிஷ்யூ பேப்பர்' பண்டல்களை ஏற்றி, நேற்று முன்தினம் இரவு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை கண்ணையா, 30, என்பவர் ஓட்டி வந்தார்.
மதனந்தபுரம் - -முகலிவாக்கம் சாலையில், முகலிவாக்கத்தை கடந்தபோது மின் கம்பி உரசி, கன்டெய்னர் லாரியில் தீப்பொறி ஏற்பட்டது. இதில், உள்ளே இருந்த டிஷ்யூ பேப்பர்கள் எரிய துவங்கின.
விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்தில், லாரியில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிஷ்யூ பேப்பர்கள் நாசமாயின. மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.