ADDED : பிப் 11, 2025 06:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா குண்ணவாக்கம் குறுவட்டத்தில் உள்ள மலையாங்குளம் கிராமத்தில், இன்று காலை 10:00 மணிக்கு மனுநீதி நாள் முகாம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடக்கிறது. இதில், பல்வேறு துறையின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்து, நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட உள்ளன.
எனவே, குண்ணவாக்கம் குறுவட்டத்திற்கு உட்பட்ட, படூர், காட்டாங்குளம், சிறுமையிலூர், சித்தாலப்பாக்கம், மலையாங்குளம், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் பங்கேற்று, மனுக்களை அளித்து பயன்பெறலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

