sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு

/

 களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு

 களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு

 களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு


ADDED : டிச 26, 2025 06:03 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூரில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், ஒதுக்கீடு செய்த, 6.32 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப் பட்டுள்ள பயணியர் நிழற்குடை வரும் 2026ம் ஆண்டு ஜன., மாதம் திறக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, களக்காட்டூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு விச்சந்தாங்கல், களக்காட்டூர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர், உத்திரமேரூர் காஞ்சிபுரம் என, இரு வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், உத் திரமேரூர் செல்லும் சாலையோரம் பயணியர் நிழற் குடை அமைக்க வேண்டும், அதேபோல காஞ்சிபுரம் செல்லும் சாலையோரம் சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என, களக்காட்டூர், விச்சந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், உத்திர மேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, உத்திரமேரூர் செல்லும் சாலையோரம் மட்டும், புதிதாக நிழற்குடை அமைக்க 6.32 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து பயணியர் நிழற்குடை புதி தாக அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் கூறியதாவது:

களக்காட்டூரில் உத்திரமேரூர் செல்லும் சாலையோரம் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை ஜனவரி மாதம் திறக்கப்படும்.

காஞ்சிபுரம் செல்லும் சாலையில், சிதிலமடைந்த நிலையில் உள்ள பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டு புதிய நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us