/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லத்தில் செயல்படாத சிக்னலால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
/
வல்லத்தில் செயல்படாத சிக்னலால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
வல்லத்தில் செயல்படாத சிக்னலால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
வல்லத்தில் செயல்படாத சிக்னலால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 12, 2025 02:00 AM

ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லம் சந்திப்பில் செயல்படாத சிக்னலால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ஒரகடம் அருகே, வல்லம் -வடகால் சிப்காட் தொழில்பூங்காவில், 150க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தொழிற்சாலைகளுக்கு மூலப்பெருட்கள் மற்றும் உதிரி பாகங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பேருந்துகள், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லம் சந்திப்பு வழியே சென்று வருகின்றன.
இந்த நிலையில், வல்லம் சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டன.
உள்ளூர் வாசிகளும் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கினர். இதையடுத்து, வல்லம் சந்திப்பில் சிக்னல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, ஐந்து மாதங்களுக்கு முன், வல்லம் சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சிக்னல் வேலை செய்யாததால், அப்பகுதியில் தாறுமாறாக வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால், மீண்டும் வாகன நெரிசல் அதிகரித்து உள்ளது. எனவே, பழுதான சிக்னலை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.