/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்
/
மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 10, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் தலைமையில் நடத்தப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்கான சிறப்பு குறைதீர் கூட்டம், வரும் 12ம் தேதி மாலை 3:00 மணிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை, 044 - -2999 8040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

