ADDED : டிச 06, 2024 09:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:உலக தன்னார்வலர்கள் மற்றும் உலக மண் தினத்தையொட்டி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.
இதில், பசுமை இந்தியா, காஞ்சி அன்னசத்திரம், சர்வம் உள்ளிட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த பல்வேறு தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து மகிழம் மரக்கன்றுகளை நட்டனர்.
இவ்வாறு நடப்படும் செடியை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேயாமல் இருக்க, செடிகளை பாதுகாக்கும் வகையில், உருளை வடிவ கம்பி வலை அமைத்தனர்.