/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லாரி மீது லாரி மோதி விபத்து சுங்குவார்சத்திரத்தில் நெரிசல்
/
லாரி மீது லாரி மோதி விபத்து சுங்குவார்சத்திரத்தில் நெரிசல்
லாரி மீது லாரி மோதி விபத்து சுங்குவார்சத்திரத்தில் நெரிசல்
லாரி மீது லாரி மோதி விபத்து சுங்குவார்சத்திரத்தில் நெரிசல்
ADDED : பிப் 16, 2025 02:17 AM

காஞ்சிபுரம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் இருந்து, சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு, ஸ்ரீபெரும்புதுார் வழியாக நேற்று காலை 8:00 மணி அளவில் காஞ்சிபுரம் நோக்கி அசோக் லே லான்ட் லாரி சென்றது.
கீரநல்லுார் அருகே, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார்சத்திரம் நோக்கி சென்ற எம்-சாண்ட் எற்றி சென்ற லாரி, சாலையை கடக்க முயன்ற லாரி மீது மோதி உள்ளது.
இந்த விபத்தால் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மற்றொரு வாகனங்கள் மோதியதில், சென்டர் மீடியன் தடுப்பு சுவரில், சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி சிக்கியது.
இந்த விபத்தில், இரு லாரி ஓட்டுனர்கள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த, சுங்குவார்சத்திரம் போலீசார் வாகன விபத்தில் சிக்கிய லாரிகளை மீட்டனர்.
இந்த வாகன விபத்தால், சென்னை- -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

